சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.


Coimbatore:

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு சரவணம்பட்டி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நின்றிருந்த, பதிவு எண் இல்லாத மற்றும் சேஸ் எண்கள் தெளிவாக இல்லாத சுமார் 73 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் பிரிவு 106-ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கையகப்படுத்தப்பட்ட வாகனங்களில் சிலவற்றை பொதுமக்கள் தவறுதலாக நிறுத்திவிட்டு சென்றிருக்கலாம் அல்லது காணாமல் போன வாகனங்களாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த வாகனங்கள் தங்களுடையது என கருதும் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தை அணுகி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் விரைவாக காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து வாகனங்களை மீட்டுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...