கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோவை:
சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சட்டப்பேரவையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழரின் பாரம்பரியம், தமிழ்நாட்டின் பெருமை, பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய உணவுகளின் சிறப்பு, உணவுத் திருவிழா மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரத்னா குழும நிறுவனங்களின் இயக்குநர் சித்ரா பழனியப்பன் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.

கல்லூரி அறங்காவலர்கள் கனகவள்ளி சண்முகநாதன், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் தீர்மானம் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சட்டப்பேரவையில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியின் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில், தமிழரின் பாரம்பரியம், தமிழ்நாட்டின் பெருமை, பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய உணவுகளின் சிறப்பு, உணவுத் திருவிழா மற்றும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரத்னா குழும நிறுவனங்களின் இயக்குநர் சித்ரா பழனியப்பன் மற்றும் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.
கல்லூரி அறங்காவலர்கள் கனகவள்ளி சண்முகநாதன், நிர்மலா ராஜசபாபதி, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.