கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத், ஆகியோர், இன்று (28.07.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மத்திய மண்டலம் வார்டு எண். 62க்கு உட்பட்ட சாரமேடு, நஞ்சுண்டாபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
இவ்வாய்வுகளின் போது, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, கமலக்கண்ணன், சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மத்திய மண்டலம் வார்டு எண். 62க்கு உட்பட்ட சாரமேடு, நஞ்சுண்டாபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
இவ்வாய்வுகளின் போது, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, கமலக்கண்ணன், சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.