மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை தள்ளியதில் அவர் உயிரிழந்த வழக்கில், குணசேகரன் (29) என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக பெயிண்டிங் தொழிலாளியை தாக்கி கொலை செய்ததாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (29) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாஸ்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) ஆகியோர் பெயிண்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடப் பெயிண்டிங் பணிக்காக ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி மூலம் அழைத்து வரப்பட்டு, பணிபுரிந்த அதே கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர் இருவரும் மது அருந்தியபோது, பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த பி.வி.சி. குழாயால் வெங்கடேஷ் குணசேகரனை தாக்கியதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த குணசேகரன் வெங்கடேஷை பலமாகத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரன் அங்கிருந்து விலகிச் சென்று கட்டிடத்தின் மேல்தள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அவர்களுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் BNS 103, 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...