கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன், செல்வி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா (15). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் செல்வபுரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.