கோவை மாநகராட்சி 84வது வார்டு வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.