இந்து முன்னணி கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் இதுவரை 161 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சகம் உரிமையாளர்களை சந்தித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.