கோவை, முள்ளாங்காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், ஈஷா யோகா மையத்தினரிடமிருந்து பாதுகாப்பு வேண்டி காவல் துறையினரிடம் இன்று புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி முள்ளாங்காடு பகுதியில் வன சாவடி எதிர்புறம் பல ஆண்டுகளாக வாழும் இருளர் வகுப்பினைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலங்களை தற்போது கடந்த ஒருவார காலமாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தை சேர்ந்த முகிலன், சுவாமி பசுவந்தா, சுவாமி சத்யா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் தூண்டுதலின் பேரில் பல்வேறு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஈஷா யோகா மையத்தினர் பொறுப்பு. தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளித்து அவர்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.