ப.வேலூர்: ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில், நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாயமான கல்லூரி மாணவனை, மூன்றாவது நாளாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஹரிஹரன், 18. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில், பி.டெக்., இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, தன் நண்பர்கள், ஆறு பேருடன், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தார். அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பிய நிலையில், ஹரிஹரன் மட்டும் கரைக்கு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் மாணவனை தேடினர்.
பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.
பின், நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள், ப.வேலூர் காவிரி ஆற்றின் இருகரையோரங்களில், நான்கு பரிசல்களில் தேடினர்.