முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது வழக்கு

முதல்வர் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாக, பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலர். இவர் மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனு விவரம்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் தமிழ்ப் பெண்ணான தமிழச்சி என்பவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுதமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கத்தையும், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அவதூறான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி மீது இணையதள குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...