முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது வழக்கு

முதல்வர் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாக, பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் தமிழச்சி மீது மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலர். இவர் மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனு விவரம்: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் தமிழ்ப் பெண்ணான தமிழச்சி என்பவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவதூறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுதமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கத்தையும், அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அவதூறான தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி மீது இணையதள குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸார் பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...