உணவில் விஷம் கலந்து ஐ.எஸ்.தலைவரை கொல்ல சதி?

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிசிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவில் விஷம்

ஈராக், சிரியா எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அல்கொய்தா அமைப்பில் இருந்து பிரிந்த வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் இருந்து வெளிவரும் பல்வேறு அரேபிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ்., அமைப்பின் தலைவர் அபு-பக்கர் அல் பாக்தாதி, இவரது மூன்று உதவியாளர்கள் ஈராக்கின் நைன்வேக் பீ ஆஜ் மாவட்டத்தில் தங்கியிருந்த போது மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது தான் தெரிந்தது சாப்பிட்ட உணவில் யாரோ விஷம் கலந்து கொடுத்திருப்பது.

தீவிர சிகிச்சை:

உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உணவில் விஷம் கலந்தது கொல்ல முயற்சித்தது யார் என்பது குறித்து பலரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

10 மில்லியன் டாலர் பரிசு:

ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பல முறை காயங்களுடன் தப்பினான் பாக்தாதி, இவனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்தாலோ, இருப்பிடம் குறித்த தகவல்தெரிவித்தாலோ, 10 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...