புதுக்கோட்டை: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில், தங்கமணி, பிரதீப், அருண், சண்முகவேல், கோபு என்ற 5 மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று அவர்கள் கரை திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று டில்லி வர உள்ளதால், கைதான மீனவர்கள் 5 பேரும் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.