சென்னை: மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இயல்பை விட மழை அளவு குறைவு:
தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயல்பை விட மழை அளவு குறைவு:
தென்மேற்கு பருவமழை காலம் முடிய போகிறது. ஆனால் இந்த பருவத்தில், தமிழகத்திற்கு இயல்பை விட, மழை அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தென் மாவட்டங்களில், நிலத்தடி நீரின் அளவும் சரிந்துள்ளது; அதனால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல்லில், அதிகபட்ச மழை பெய்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மத்திய மேற்கு வங்க கடலில், மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்யும்; இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.