தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் உயிரிழப்பு

கோவை வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22 ஆம்தேதி மர்மநபர்களாள் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை நடந்தது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்தனர். 

இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இந்துமுன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் கடந்த மூன்றாம்தேதி திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினரும் பலத்த பாதுகாப்போடு ஆனந்தகுமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதற்குள்ளாக ஆனந்தகுமாரின் சகோதரர் ரஞ்சித்குமார் தனது தம்பியை சென்னைக்கு கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் மன உளைச்சளை ஏற்படுத்துவதாக கூறி அவரது சகோதரர் ரஞ்சித்குமார் வியாழனன்று அரசுமருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்று அதேமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தார்.

முன்னதாக தற்கொலைக்கு முயன்றதாக போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டு கலவரம் செய்ததாக கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் ஆனந்தகுமார் மீது இன்று வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் ஆனந்தகுமார் சிசிக்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...