கோவை பீளமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் மயில்சாமி. நேற்று மாலை இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பும் போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. சுதாரித்து கொண்ட மயில்சாமி, அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு, வீட்டிற்குள் மெதுவாக சென்றார். அப்போது, வீட்டிற்குள் இருந்த நபர் பீரோவை உடைக்க முயன்று கொண்டிருந்தார். இதை பார்த்த மயில்சாமி அவரை கையும், களவுமாக பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தர். விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த குமார் (64) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.