குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 151 பயணாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


கோவை மாவட்டம், கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையத்தில் 2017 ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டுவதற்க்கான ஆணை வழங்கும் விழா நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் குளத்துப்பாளையத்தில் 50 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், சுண்டக்காமுத்தூர் பகுதியில் 101 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்க்கான ஆணையினையும் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதலமைச்சரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு மனைக்கான ஆவணங்கள் வைத்துள்ள நலிந்த வருவாய் பிரிவினர் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறுவோர் தங்களது குடிசையை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி 300 சதுர அடி கட்டுமான பரப்பளவிற்கு குறையாமல் கான்கீரிட் தளம் போட்ட வீடு கட்ட அரசு மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்கி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் வீடுகட்டி இருப்பின் மாடியில் விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் அரசு மானியம் வழங்குகிறது. மேலும், வீட்டு மனைப்பட்டா வைத்திருப்பவர்கள் பெரிய வீடு கட்டும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.6 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் நோக்கம் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட குடிசை பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...