கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் திருவிழா


கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்கால விளையாட்டுகள் மற்றும் போட்டிகளில் இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். கயிறு இழுத்தல், உறி அடித்தல் மற்றும் கண்ணாமூச்சி போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 



இப்போட்டிகள் பழைய கலாச்சாரத்தினை, பழக்க வழக்கங்கள் மற்றும் முறைகளை எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்தியது. கலாச்சாரத்தினை, நமது பாராம்பரிய விளையாட்டுக்கள், போட்டிகளை குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மறக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. 



மேலும் கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மற்றும் விடுதி மேலாண்மைத்துறை பராம்பரிய உணவு வகைகளை அனைத்து அலுவலர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மதிய உணவாக பரிமாறினர். மேலும் இக்கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித்துறை சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள நகலூர் மலைவாழ் கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 



இதில் இக்கல்லூரிகளின் முதல்வர்கள் ஜேனட், இரமேஷ், பாபாஞானகுமார், ராதிகா, மேலாண்மைத் துறை இயக்குநர் இராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...