ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து கூறிய நடிகை த்ரிஷா-வுக்கு எதிராக கோஷங்களிட்டு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவை குனியமுத்தூரை அடுத்த குளத்துப்பாளையம் சாலையில் திரண்ட கல்லூரி மாணவர்கள் த்ரிஷா-வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து, இனி த்ரிஷா நடித்த திரடம் கோவையில் வெளியானல் திரையரங்கை முற்றுகையிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து, இனி த்ரிஷா நடித்த திரடம் கோவையில் வெளியானல் திரையரங்கை முற்றுகையிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.