மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி


கோவை செட்டிபாளையத்தை அடுத்த பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தீக்‌ஷா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீக்‌ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது பெற்றோர் தீக்‌ஷாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தீக்‌ஷா இன்று காலை பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீக்‌ஷா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தீக்‌ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...