மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலி


கோவை செட்டிபாளையத்தை அடுத்த பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு தீக்‌ஷா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீக்‌ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது பெற்றோர் தீக்‌ஷாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தீக்‌ஷா இன்று காலை பேச்சு மூச்சின்றி காணப்பட்டார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீக்‌ஷா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தீக்‌ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...