பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பவானியை காப்போம் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் மின்சாரத்திற்காக கூமபாளையம், சமயபுரம் ஆகிய இடங்களில் கதவணை கட்டப்பட்டு இருப்பதை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும், கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கேரளாவில் தேக்குவட்டை உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபட்டு போகும் எனவும், எனவே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...