மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்பு -மாநகராட்சி ஆணையாளர் தகவல்


கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் (பொ) காந்திமதி இன்று தகவல் தெரிவித்தார்.



இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும் டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 



அதனை தொடர்ந்து 03.02.2017 மற்றும் 04.02.2017 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களான மேற்கு, வடக்கு, மற்றும்; தெற்கு ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு-71 திருச்சி சாலை, சுங்கம் தபால் நிலையம் மற்றும் நிர்மலா பள்ளிச் சாலை அருகில் சாலையோர ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளையும் அகற்றப்பட்டு  மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு-18, வீரகேரளம், டாட்டா, சின்மயா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு-28, சரவணம்பட்டி, ராமநந்தா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான 122 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், வார்டு-92, குனியமுத்தூர், ஜெயகெந்ரா சிக்கந்தர் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.6 கோடி மதிப்பிலான 15 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு-71 திருச்சி சாலை, சுங்கம் தபால் நிலையம் மற்றும் நிர்மலா பள்ளிச் சாலை அருகில் சாலையோர ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளையும் அகற்றப்பட்டு ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.



மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  மாநகராட்சி ஆணையாளர் (பொ) காந்திமதி  தெரிவித்தார்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...