ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலக புற்றுநோய் தினமாக இன்று பிப்ரவரி 4, அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் நம்மை பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அனுபவிக்கும் வலி எதனினும் ஒப்பிடமுடியாதொன்று, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் உயிரிழக்கும் நிலைக்கு சென்றாலும் அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் அவர்களை முழுமையானதாகவும் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், வலிகளை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.



 

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை கண்டு பரிதாப்படுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல மாறாக அன்பும், புரிந்துணர்வும், ஆதரவும் தேவைப்படுகிறது. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வாழவே ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையிலேயே நோயுற்ற ஒவ்வொரு வாழ விரும்புகிறார்கள். கோவை அரசு மருத்துவமனையில் தற்பொழுது 5திற்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் அவர்களை மகிழ்விக்கவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை அக்குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய புது உடைகள், விளையாட்டு பொருட்கள், இனிப்புகள் என பரிசளித்து அவர்களை மகிழ்வித்து குழந்தைகளின் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.



மேலும் குழந்தைகள் பிரிவில் மற்ற நோய்க்காக சிகிச்சை பெரும் குழந்தைகளுக்கும் இனிப்பு விளையாட்டு பொருட்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இதற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நல்ல உள்ளங்களுக்கு அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்தது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...