குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட்டில் இருந்து குறிச்சி குளத்திற்கு செல்லும் 3.27 கி.மீ நீளமுள்ள கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.


Coimbatore: மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.






தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி,கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






அந்த வகையில், நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் புட்டுவிக்கி சாலையில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.






மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 3.27 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.




இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் விசாலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...