கோவை கூட்ஸ்செட் சாலையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சுவர் ஓவியம்!


சேலம் டிவிசன் தெற்கு ரயில்வே துறை மற்றும் அறம் பவுண்டேஷன் சார்பில் கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்களால் சுவர் ஓவியம் வரையப்பட்டது. 



இதனை சுமார் 225க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து ரயில்வே சம்பந்தமான ஓவியங்கள், இயற்கை ஓவியம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓவியம், மனித உரிமை மற்றும் குழந்தைகளுக்கான கார்டூன் ஓவியம் போன்றவற்றை வரைந்தனர். இதற்கான பெயிண்டிங் மற்றும் இதர தேவைகளை சென்னீஸ் நிறுவனம் வழங்கியது. 

 



இதனை கோவை மாநகர போக்குவரத்துறை துணை ஆணையர் சரவணன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மாணவர்கள் சுவர் ஓவியம் வரைவதற்கு சாலை ஓரங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு வழங்கினார். இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதையும் ஊக்குவித்தும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். இதனை கோவை அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் அறங்காவலர், லதா சுந்தரம் ஒருங்கிணைத்தார்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...