விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சி பி ஐ எம் கட்சியினர் கைது


விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வறட்சி கடுமையாக பாதித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பாலபாரதி குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறிய அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதேபோல கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...