ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியதற்க்கு 8 நாள் சம்பளத்தை பிடித்ததை கண்டித்து மில் தொழிலாளர்கள் போராட்டம்

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய என்.டி.சி மில் தொழிலாளர்களில் 8 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்யபோவதாக என்.டி.சி மில் நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...