ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியதற்க்கு 8 நாள் சம்பளத்தை பிடித்ததை கண்டித்து மில் தொழிலாளர்கள் போராட்டம்

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய என்.டி.சி மில் தொழிலாளர்களில் 8 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்யபோவதாக என்.டி.சி மில் நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...