முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் முத்தண்ணன்குளம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் Turf மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு,இளைஞர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட வேண்டிய மைதானம், தற்போது "KOVAI ADDA" என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வணிக நோக்கில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ள, DYFI கோவை மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, இந்த Turf மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர்.



எனவே, கோவை மாநகராட்சி அந்த தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, Turf மைதானத்தை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என DYFI கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தை தனியாரின் லாப நோக்கிலிருந்து மீட்டெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேரடி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...