50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த டி. கிருஷ்ணன், பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக ரூ.40 ஆயிரம் கீழே விழுந்துள்ளது. இதனை அருகில் இருந்த ஒருவர் எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பி-2 ஆர்.எஸ்.புரம் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சரக உதவி ஆணையர் செல்லதுரை உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் காமாட்சிநாதன் வழிகாட்டுதலில், சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை காவலர்கள் சிந்தன், நாகூர் கனி மற்றும் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணத்தை எடுத்துச் சென்ற நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் இரண்டு நாட்கள் வெளியூரில் இருந்ததும், பின்னர் தாமாக முன்வந்து பணத்தை ஒப்படைக்க தயாராக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் எடுத்துச் சென்ற ரூ.40 ஆயிரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் முன்னிலையில் உரியவரான கிருஷ்ணனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...