கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கோவை மத்திய சிறை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், முதற்கட்டமாக சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சவுரிகாடு, வடகவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (55), கடந்த 2016-ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த சில நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மத்திய சிறைச்சாலையின் சிறை வார்டன் தாமரைக்கனி அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார், கைதி உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...