சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில் ஏத்தாப்பூர் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை


இன்று (08.02.2017)  சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில்  பயணிகள் ரயில்களில் (ரயில் எண்.76847-சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், ரயில் எண்.76850 விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில், ரயில் எண் 56513- காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் மற்றும் ரயில் எண் 76849- விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில்) சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையில் 62 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 19,770 ரூபாய் பயணச்சீட்டுத் தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அது போல, 19 பேர் தகுந்த புக்கிங் இல்லாமல் சுமைகளை ஏற்றிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3,170 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையை சேலம் கோட்ட துணை வணிகவியல் மேலாளர் எம். ஷாஜஹான் தலைமையிலான 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள், 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீர்ர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேலும் பல இடங்களில் செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...