தொடரும் வறட்சியும், விவசாயிகள் மரணமும்- நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள் ?


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து பல லட்சம் விவசாய நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

மேலும், குடிநீருக்குக்கூட தற்போது பஞ்சம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் சிறமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வறட்சியினால் விவசாயம் பொய்த்துப்போனதால் தற்போது வரை தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மன வேதனையில் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாய சங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து முழுத்தீர்வினை எட்டவில்லை.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெரிஞ்சிபேட்டை என்னும் பகுதியில் தனது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடி வறட்சியின் காரணமாக காய்ந்து போனதை கண்டு மனவேதனையில் ராஜேந்திரன் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியினையும்  ஏற்படுத்தியுள்ளது. இனியும் வறட்சியின் காரணத்தால் விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...