அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும் தென் கொரிய ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும், தென் கொரியாவில் செயல்பட்டு வரும் ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வரும் 5 வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, பயிற்சிக்காக மாணவர்கள் பரிமாற்றம், சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுக்காக திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

ஜிஜு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பயோ டெக்னாலஜி பேராசிரியரும், தேசிய முதன்மை ஆலோசகருமான முனைவர் மின்தேசன் இந்திய மாணவியரின் பயோ டெக்னாலஜி துறையில் வளர்ச்சியை கண்டறிந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார். 

அவர் ஆலோசகராக இருந்த காலத்தில் கொரியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு உதவியுள்ளார். 

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜினோமிக்ஸ், மெட்டாபோலோமிக்ஸ் மற்றும் மருத்துவ குணமுள்ள தாவரங்களின் பன்புகளைக் குறித்து குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை பெற இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பல்கலை கழகத்தின் பதிவாளராக உள்ள எஸ்.கவுசல்யா இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பயனடைந்தவர் ஆவார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று மாணவிகள் கல்வி உதவித் தொகையுடன் ஜின்செங் குறித்து ஆராய்ச்சி செய்ய தேர்வாகியுள்ளனர். 6 முதுகலை மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் தங்களுடைய ஆராய்ச்சியினை கொரியாவில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவிகளும் வழங்கப்படும்.

விலங்கியியல் பயோ டெக்னாலஜி, நியூட்ரிஜீனோமிக்ஸ், ப்ளேன்ட் ஜீனோமிக்ஸ் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளங்கலை படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கொரியாவில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...