வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கோவையில் தனியார் நிறுவனம் மோசடி

கோவை மாவட்டம், வடகோவையில், ஏர்குளோபல் ராஜ்டூர் என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த கோவை புலியகுளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆலாந்துறையை சேர்ந்த மாரிமுத்து, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த இந்துஜா ஆகியோர், இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வடகோவையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர்கள் சென்றபோது, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் செலுத்துமாறு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தோஷ்குமார் 3.30 லட்சம் ரூபாய், மாரிமுத்து 1.50 லட்சம் ரூபாய், சிந்துஜா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை எதுவும் பெற்றுத்தராமல் இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...