துடிப்புடன் இருந்த இருதயத்தில் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய அளவில் கேஎம்சிஎச் சாதனை


கோவையைச் சேர்ந்த கேஎம்சிஎச் மருத்துவமனையில் துடித்துக்கொண்டிருந்த இதயத்தில் இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவமனைத் தரப்பில் ஆசிய அளவில் இச்சிகிச்சை தற்போதே முதன்முறையாக நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இன்று காலை இதுகுறித்து கேஎப்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறுவை சிகிச்சை கேஎம்சிஎச் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். அரோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் நோயைக் குணப்படுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். 

அமெரிக்காவில் இதுவரை 7-8 மனிதர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் கேஎம்சிஎச் மருத்துவமனை இதில் முன்னோடியாக தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிச்சதவிகிதம் 90 முதல் 95 சதவிகிதம் ஆகும். வயதாகும் போது இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் கடிணமாக மாறுகின்றன. இந்த 76 வயது நோயாளி இதற்கு முன்னரே இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் உள்ள நிபுனர்கள் வெனிபிரி வால்வை பொருத்துவதே இதற்கு சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று பரிந்துரை செய்தனர்.

எங்களுடையே முதல் முயற்சியிலேயே இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது நோயாளி சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நடக்கத் துவங்கிவிட்டார்" என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருதய சிகிச்சை நிபுனர் மருத்துவர் தாமஸ் அலெக்ஸ்சான்டர் மற்றும் இருதய சிகிச்சை பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜனாத் ஆகியோரை நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அறுமுகம் செய்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...