ஹூண்டாய் கார் கம்பெனியுடன் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரி உடன்பாடு

நாட்டில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் கல்லூரியில் “ஹூண்டாய் தொழில் மேம்பாட்டு மையம்” ஒன்றை துவக்கியுள்ளது.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புகளின் ஒரு பகுதியாக ஹூண்டாய் நிறுவனம், தரமான கல்வியுடன், கார், இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் கல்வி உபகரணங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வழங்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஒய்.கே கூ இதுகுறித்து கூறுகையில், “எக்ஸெல் பாலிடெக்னிக் உடன் இணைந்து, ஒரு பொறுப்புள்ள நிறுவன குடிமகனாக திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆட்டோமொபைல் சேவை ஆலோசகர்களை உருவாக்கும் இந்த மையம், மாணவர்களுக்கு நவீன வாகன தயாரிப்பு தொழில் நுட்பங்களை வழங்குவதோடு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்,” என்றார்.

புதிய பாடத்திட்டம் மற்றும் பயிற்சிகள், ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்துக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும். பாலிடெக்னிக் கல்லூரியில் திறமையானவர்களை உருவாக்குவதோடு, இந்திய வாகன சேவை தொழிலுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்வின் கீ்ழ், திறன் மேம்பாட்டு பயிற்சியானது முதல்முறையாக 2012ம் ஆண்டு ஐடிஐ பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்தது. தற்போது நாடு முழுவதும் 38 ஐடிஐ-க்களைக் கொண்டுள்ளது.

மாநிலத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஐடிஐ உடன், பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் பயின்றோரில் 95 சதவீதத்தினருக்கு ஹூண்டாய் டீலர்களிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐக்களில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...