வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் பயன்பாடுகள் குறித்து தேசிய கருத்தரங்கம்

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் பயன்பாடுகள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் இன்று கோவை தமிர்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டது.

கருத்தரங்கின் அமைப்பு செயலாளரும், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவருமான கோ.அருள்மொழிச்செல்வன் இந்நிகழ்வில் பங்கேற்ற விஞ்ஞானிகளையும், மாணவர்களையும் வரவேற்று மண் வளத்தை கண்டறிய கதிரியக்க ஐசோடோப்பு மற்றும் தடங்காண் முறையின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக இயற்கை வள மேளாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் கி.குமார், சிறப்பு விருந்தினர்களான புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழமத்தின் முன்னாள் துணைப் பொது இயக்குநர் (கல்வி) சி.தேவகுமார் மற்றும் மும்பை அணு அற்றல் துறையின் இணைச் செயலாளர் மெர்வின் அலெச்காண்டர் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

மேலும், அவரது உரையில் மண்ணியல் துறை விஞ்ஞானிகளிடம் கதிரியக்க ஐசோடோப்பு முறையில் அராய்ச்சியை மேம்படுத்தவும் அதே துறையில் பணியாற்றும் வல்லுநர்களோடு இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் துணை பொது இயக்குநர் சி.தேவகுமார் தனது தொடக்க உரையில் பருவநிலை மாற்றத்தில் ஐசோடோப்பின் பங்கு, பிறழ்வு இனப்பெருக்கம் மற்றும் மூலக்கூறு இனப்பெருக்கம், ஒருங்கிணைந்த பயிர்ச்சத்து, பயில் சுழற்சி திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை ஒருங்கிணைத்து அதன் வழியாக பயிருக்கு கிடைக்கும் சத்துக்கள் மற்றும் மண்ணில் உள்ள சத்துக்களின் இருப்பு நிலைகளை கணக்கிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடங்காண் முறை உபயோகத்தைப் பற்றி கூறினார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும், இன்னாள், மும்பை அணு ஆற்றல் துறையின் இணை செயலாளருமான மெர்வின் அலெக்சாண்டர் தமது தலைமை உரையில் வேளாண்மை, மருத்துவம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பல துறைகளில் கதிரியக்க அணுக்களின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், அறுவடை பின்சார்ந்த தொழில்நுட்பங்களில் இவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தினார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கு.ராமசாமி கருத்தரங்க மலரை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் 82 சதவிகித காய்கறிகள் மற்றும பழங்கள் கதிர்வீச்சு இனப்பெருக்க முறையின் மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தினார்.

இக்கருத்தரங்கின் நிரைவாக அமைப்பு செயலாளரும், மண்ணியல் துறை பேராசிரியருமான ச.மீனா அனைவருக்கும் நன்றியுடிர வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...