பவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டும் பணியை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தடையாணை வாங்க வேண்டும் - தபெதிக கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்கு வட்டை என்னும் பகுதியில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது எனவும், மேலும் 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் தமிழக அரசு விரைந்து வழக்கு தொடுத்து முறையாக வழக்காடாத காரணத்தால் தடையாணை பெற முடியவில்லை என கூறிய அவர், மேற்கு மண்டலத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பிரச்சனைக்கு முழு கவனம் செலுத்தி மீண்டும் புதிய வழக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வரும் 19 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவையிலிருந்து கேரளா செல்லும் வழித்தடங்களை அடைக்கும் வகையிலான போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...