சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை வாக்களிக்க வேண்டும், முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வர முடியாத சூழல் இருப்பதை உணர்ந்து பெரும்பான்மை கோரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறும் பெரும்பான்மை நிரூபிக்கும் தேர்தலில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அத்தொகுதியின் பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கணபதி பகுதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் மாநகர மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினரான பி.ஆர்.ஜி அருண்குமார் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வாக்களிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூவத்தூரில் இருப்பது மட்டுமே ஊடகங்கள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கவனத்திற்கு மக்களின் எண்ணங்களையும், கட்சி தொண்டர்களின் மன நிலையையும் எடுத்து கூறும் வகையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வாக்குகள் கோரி மக்களை சந்திக்க வர முடியாத நிலை இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறிய அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு  இல்லாதவர்களும் கட்சியை கைப்பற்ற துடிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...