வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை, இயக்க வளர்ச்சி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தனர்.

Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வி தி லீடர் இயக்கத்தின் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பாக, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார். சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்புரை வழங்கினார்.



கூட்டத்தில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என்றும், பொதுமக்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்டப் பொருளாளர் பிரபு, முன்னாள் செயலாளர் சாந்தி, பிரவீன், விஜயகுமார், மாரிசாமி, எல்.ஐ.சி. பாலு, கூடலூர் நகராட்சிக் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், கிருபாகரன், வீரபாண்டி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் மகேந்திரன், மகேந்திரராஜ், சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...