இரண்டாவது முறையாக சட்டப்பேரவை ஒத்திவைப்பு!


பெரும்பாண்மையை நிரூபிக்க  சட்டப்பேரவை கூடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் கூடினர். தொடர்ந்து, பன்னீர் செல்வம் அணியினரும், எதிர்க்கட்சியான தி.மு.க  மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டமன்றத்தில் கூடினர். காலை 11 மணியளவில் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் தொடக்கம் முதலே எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்தனர். மேலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபாநாயகர் தனபாலின் மைக்கை உடைத்தனர். இதன் காரணமாக சட்டப்பேரவை மதியம் ஒரு மணிவரை ஒத்திவைக்கபட்டது.

பின்னர், 1 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் நீடித்தது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரி சபாநயகரின் இடத்தை முற்றுகையிட்டனர். இந்த அமளியின் போது சபாநாயகர் தனபாலின் மேற்சட்டை கிழிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இரண்டாவது முறையாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மூன்று மணி வரை சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும்,  தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், வெளியேற மறுத்து தற்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழல் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...