கோவை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!


தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப் போய் உள்ளதாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வறட்சியானது பசுமை செழித்திருந்த கோவை மாவட்டத்தையும் சமீப காலமாக தாக்கி வருகின்றனது. அதன் படி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக இருந்த சிறுவாணி, அத்திக்கடவு, பவானி, ஆழியார் உள்ளிட்ட அணைகளுக்கு சரியான நீர் வரத்து இல்லாததாலும், பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததின் காரணத்தாலும் கோவையில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே இருக்கும் பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...