கோவையில் ஆடி அறிமுகப்படுத்தும் டீசல் கார் ஆல்நியு ஆடிஏ4, ஆடி ஏ4 35டிடிஐ

ஜெர்மன் சொகு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மாபெரும் வெற்றிகண்ட ஏ4 ஆடியை தொடர்ந்து தற்போது புதிய டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய ஆடி வகை காரின் அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில், ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி பேசுகையில், வெற்றிகரமாக விற்பனையாகும் சிறந்த மாடலை உருவாக்குவது எளிதான வேலை அல்ல. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையும் மிகவும் பரவசமானது. ஆடிஏ4 35டிடிஐ மேலும் ஒரு உயர்நிலையை எட்டியுள்ளது. ஈடு இணையற்ற தொழில்நுட்பம், முந்தைய ஏ4 ஆடியை காட்டிலும், மறு வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீவிர வரவேற்பை பெற்றுள்ளது.

செயல் திறன், ஓட்டுதற்கு உற்சாகம், உயர்தொழில்நுட்ப தகவல் பொழுதுபோக்கு அம்சம் போன்றவை இந்த பிரிவில் மேலும் ஒரு உயர்வை அளிக்கிறது.

இந்த புதிய வகை ஆடி காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட எரிதிறன் செயல்பாட்டு முறையால் எரிபொருள் சிக்கனத்தில் புதிய நிர்ணயம் கிடைத்துள்ளது.



மறுவடிவமைக்கப்பட்ட 7 ஸ்பீட் எஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன், இன்போடைன்மென்ட் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் , அதிகபட்ச சக்தி தரும் 190 எச்பி இன்ஜினாக மாற்றியுள்ளது" என்றார்.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்ச திறனாக 1ஜிஎச்பி, பலவகை உலோக கலவையால் முந்தைய வாகனங்களை விட 120 கிலோ இலகு எடை, எரிபொருளை சிக்கனப்படுத்த எஸ்-ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுக்கான 7 நிலை வேக கட்டுப்பாடு, சக்தியிலும் எரிபொருள் சிக்கனத்திலும் 7 சதவிகிதம் அதிகரிப்பு, விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ், புதிய எம்எம்ஐ டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

இதன் கோவை மாவட்டத்தில் எக்ஸ் ஷோரும் விலையாக ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...