'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் ஆகிறது -சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர்

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், தொழில்துறையினர் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்து இருந்த மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம், இந்திய தொழில் வர்த்தகசபை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். டெல்லியிலும் அவரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 



இதைத்தொடர்ந்து, கோவை–பெங்களூரு இடையே 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என்று சென்ற வருடம்  அறிவித்தார். இந்நிலையில், புதிய ரயிலுக்கான நேர விவரம் இதன்படி கோவை–பெங்களூரு புதிய ரயில் பகல்நேர ரயிலாக இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து 22666 என்ற எண்ணுள்ள உதய் எக்ஸ்பிரஸ் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு போய் சேருகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து 22665 என்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடைகிறது. புதிய ரயில் இயக்கப்படுவதற்கான தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் கோவையில் 'உதய் எக்ஸ்பிரஸ்' விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. 

இது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்; கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பணிகள் நடந்து வருகிறது. உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்) ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும். பயணநேரம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. தற்போது வரை ஒரு சில பெட்டிகள் மட்டுமே உள்ளது. விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...