'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் ஆகிறது -சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர்

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், தொழில்துறையினர் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்து இருந்த மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம், இந்திய தொழில் வர்த்தகசபை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். டெல்லியிலும் அவரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 



இதைத்தொடர்ந்து, கோவை–பெங்களூரு இடையே 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என்று சென்ற வருடம்  அறிவித்தார். இந்நிலையில், புதிய ரயிலுக்கான நேர விவரம் இதன்படி கோவை–பெங்களூரு புதிய ரயில் பகல்நேர ரயிலாக இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து 22666 என்ற எண்ணுள்ள உதய் எக்ஸ்பிரஸ் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு போய் சேருகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து 22665 என்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடைகிறது. புதிய ரயில் இயக்கப்படுவதற்கான தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் கோவையில் 'உதய் எக்ஸ்பிரஸ்' விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. 

இது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்; கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பணிகள் நடந்து வருகிறது. உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்) ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும். பயணநேரம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. தற்போது வரை ஒரு சில பெட்டிகள் மட்டுமே உள்ளது. விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...