ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்


போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓய்வூதியத்தை பிரதி மாதம் 1ம் தேதியே ஒரே தவணையாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவாதப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சபடி 13 சதவிகித உயர்வை கடந்த 1 வருடமாக வழங்கபடாமல் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.



குடும்ப ஓய்வூதிய உயர்வு 15 சதவிகிதத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதிய நல அமைப்பின் சார்பில் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புச் சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...