மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது: கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை எனவும், மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈஷா யோக மையத்திற்கு நாளை பிரமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகயம்யையொட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் மூலமாக கோவை வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக செய்த தனது தரப்பு தவறுகளை மறைக்கவே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளது. திமுக, அதிமுக என்ற இரண்டு கழகங்களினாலும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் வராது. எந்த வழியை கடைபிடித்தாலும் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இந்த இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். முதல்வர் தனது பொறுப்பை காப்பாற்ற செலுத்தும் கவனத்தை சுகாதாரம், விவசாயத்தின் மீதும் செலுத்த வேண்டும். வறட்சி, வெள்ளம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தான் முறைப்படி கேட்டு பெற வேண்டும்.

பல மாதங்களாக தமிழக அரசு செயல்படாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கவில்லை. இத்திட்டம், முந்தைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம். மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது  ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க தற்போது சில எதிர்ப்புகள் வந்தாலும்  அந்த பிரச்சணைக்கு நீதிமன்ற வழக்கு மூலமாக தீர்வு காண வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் பிரச்சணைகளுக்கு உயிரோட்டம் தருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...