தாராபுரத்தில் அரசு பேருந்து ஜப்தி - அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அரசு பேருந்தை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் கவுண்டர் மகன் தங்கவேல்(45). இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்து கிழே விழுந்த தங்கவேல் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கவேலின் தந்தை, தாராபுரம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்கவேல் குடும்பத்திற்கு ரூ.7.38லட்சம் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.. மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

தாராபுரம்-பழனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...